அடைக்கல அன்னை நம் பக்கத்தில் இருக்கும் பொழுது !
சோதனைகள் வரும்பொழுது அன்னை மரியாளிடம் செல்வோம். அவளிடம் நம் வேதனைகளைச் சொல்வோம். அவளது பாதுகாவலைத் தேடுவோம். பயந்து கதறி அழும் குழந்தை தன் தாயிடம் ஓடி அவளுடைய அடைக்கலத்தைத் தேடி, அவள் பராமரிப்புக்குள் அடங்குவது போல நாமும் கன்னிமரியாளிடம் போய் அவள் மாசற்ற இதயப் போர்வையில் மறைந்து அடைக்கலம் தேடுவோம். அப்போது நாம் நலமாயிருப்போம். அடைக்கல அன்னை நம் பக்கத்தில் இருக்கும் பொழுது தீமைகள் நம்மை நெருங்காது.

